பிரான்சு, பிரேசில் உள்ளிட்ட மேலைநாடுகளின் கடற்கரைகளில் ஏராளமானோர் சூரிய குளியலில் ஈடுபடுவார்கள். பலர் நிர்வாண குளியல் போடுவதும் உண்டு. தற்போது இந்த சூரிய குளியல் செய்வோருக்கு பாரீஸ் நகர போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.
கடற்கரை, பூங்கா பகுதியில் சூரிய குளியலில் ஈடுபடுவோர் நாகரீகமான முறையில் ஆடை அணிந்திருக்க வேண்டும். தவறினால் அபராதம் அல்லது சிறைதண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.