மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவன்!


தனது மனைவி பிறருடன் பாலியல் தொடர்புகொள்ள முடியாத வகையில் மனைவியின் பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டொன்றை கொழுவிய நபரொருவரை போலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்த சம்பவமொன்று இந்தியாவின் இந்தூர் நகரில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மேற்படி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேற்படி கணவன் தனது மனைவிக்கு மதுவை அருந்தவிட்டு தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற போதே இப்பெண் நஞ்சருந்தியுள்ளார்.

இப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பெண்ணின் பிறப்புறுப்பில் பூட்டு காணப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.மேற்படி பெண் அருந்திய நஞ்சை வெளியேற்றுவதற்காக குழாயொன்றை வயிற்றுப்பகுதிக்குள் செலுத்துவதற்கு முயன்றபோதே வைத்தியர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து போலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

தனது கணவர் சோஹனை தான் 16 வயதாகவிருக்கும்போதே திருமணம் செய்ததாகவும் அவர் பல வழிகளிலும் தன்னை துன்புறுத்தியதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்தூர் முஷக்டி பகுதியில் வசித்து வந்த சோஹான் கடந்த 2008 ஆம் ஆண்டு, தான் நித்திரையில் இருந்தபோது தன்னை ஒரு அறையில் வைத்துப் பூட்டியதாகவும் தனது பிறப்புறுப்பில் கூர்மையான கருவியை கொண்டு பூட்டிட்டதாகவும் அப்பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சோஹன் தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்த முனைவதாகவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்பெண் நஞ்சருந்தியப்பின் இது தொடர்பில் தனது சகோதரிக்கு அறிவித்துள்ளார். பின்பு சகோதரியின் மகன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.போலிஸார் சோஹனை கைது செய்துள்ளதுடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"