டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் 2 பேரை அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 3 பேர் ஒரு விருந்து நிகழ்ச்சிக்காக பாவனா பகுதிக்கு அழைத்தனர். மாணவிகள் அதை நம்பி விருந்து நடக்கும் அந்த வீட்டுக்கு சென்றனர்.
அப்போது தான் அந்த வீட்டில் தங்களைத்தவிர வேறு யாரும் இல்லாததை கண்டு விசாரித்தனர். அதற்கு அவர்கள் மற்றவர்கள் எல்லோரும் வந்து விடுவார்கள் என்று கூறிவிட்டனர். பின்னர் அந்த மாணவிகளுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தனர்.அதை குடித்த மாணவிகள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர். உடனே ஒருவர் காவல் இருக்க மற்றவர்கள் அந்த மாணவிகளை கற்பழித்தனர்.
மயக்கம் தெளிந்த மாணவிகளிடம் இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினார்கள். மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மாணவிகளை கற்பழித்ததாக விக்கி,சுனில் ஆகிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அஜித் என்பவரை தேடி வருகிறார்கள்.