விபரீத திருமணம் கொலையில் முடிந்தது!


யுவதியின் பெயர் பாத்திமா. காலியில் பொத்தல பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர். தகப்பன் ஓட்டோ சாரதி. காலியில் முன்னணிப் பாடசாலை ஒன்றில் யுவதி படித்து இருக்கின்றார். இவருக்கு அக்காவும், தம்பியும் உள்ளார்கள்.

பாடசாலைக் காலத்திலேயே இவருக்கு பல ஆண்களுடன் தொடர்புகள். இவரது பாடசாலைக் காதலன் வெளிநாடு செல்லத் தீர்மானித்தான். புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றமைக்காக பாடசாலைக் கல்வியை முடித்த பிற்பாடு இக்காதலனுடன் திருமணம் செய்யாமலேயே சீசெல்சு தீவுக்கு புறப்பட்டுச் சென்று இருக்கின்றார். ஆயினும் இவர் அங்கும் கள்ளத் தொடர்புகள் வைத்திருந்து இக்காதலனிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டு இருக்கின்றார். இதனால் இவரை இக்காதலன் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வந்து விட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் மகளுக்கு மிக வசதியான ஒருவரை திருமணம் செய்து வைக்க யுவதியின் தாய் தீர்மானித்தார். மணமகன் தேவை என்று பத்திரிகை ஒன்றில் விளம்பரம் போட்டார்கள்.இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஒருவர் இவ்விளம்பரத்தின் மூலம் இவர்களுடன் தொடர்பு பட்டு இருக்கின்றார்.

யுவதியை விட லெப்டினண்ட் மிகவும் வயதானவர். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று இருந்தபோதிலும் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். ஆயினும் லெப்டினண்ட் பணக்காரர். கடவத்தையில் ஏராளமான சொத்துக்களுக்கு சொந்தக்காரர். இதனால் மகளை திருமணத்துக்கு வற்புறுத்திச் சம்மதிக்க வைத்து இருக்கின்றார் அம்மா.

திருமணம் நடந்தது. ஆனால் லெப்டினண்ட் ரொம்பவே பிஸியாக நடந்து கொண்டார். இதனால் மிக அரிதாகவே வீட்டுக்கு வருவார்.இதனால் இத்திருமண பந்தம் பயனற்றது என யுவதியின் தாய் உணர்ந்து கொண்டார். மணமகன் தேவை என்று பத்திரிகையில் மீண்டும் விளம்பரம் போட்டார். ஆயினும் இதை லெப்டினண்ட் மருமகனுக்கு தெரிய வராத வகையில் இரகசியமாக மேற்கொண்டு இருந்தார்.

சட்டத்தரணி வில்சன் ஜெயவர்தன இவ்விளம்பரம் மூலமாகத்தான் எழுத்துமூலம் தொடர்பு கொண்டார். இவர் கொழுத்த செல்வந்தரும்கூட. 68 வயதுக்காரராக இருந்தபோதிலும் 44 வயதுக்காரர் என்று கடிதத்தில் கூறி இருந்தார். அத்துடன் சொத்து விபரங்களையும் வெளிப்படுத்தி இருந்தார். மில்லியன் கணக்கான இவரின் சொத்துக்கள் இவரை திருமணம் செய்கின்ற பெண்ணுக்கு வந்து சேரும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

தாயின் பேராசை காரணமாக சட்டத்தரணியை ஒரு முறை சென்று சந்தித்தார் மகள். சட்டத்தரணிக்கு வயது 44 ஐ விட மிக அதிகம் என்று உணர்ந்து கொண்டார். சட்டத்தரணி ரொம்பவே வயதானவர் என்று தாய்க்கு வந்து சொன்னார். இவரை விட்டு விட்டு இன்னொருவரை பார்க்கலாம் என்று தாயிடம் கூறினார்.

ஆனால் இச்சட்டத்தரணியைத்தான் மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாய் மிகவும் பிடிவாதமாக நின்றார். வயது ஒரு பிரச்சினையே அல்ல, சட்டத்தரணி அதிகப்படியான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான கோடீஸ்வரர், இளைஞர்கள் எவரிடமும் இவ்வளவு பணம், சொத்து இஃப்ராது, எனவே இவரையே திருமணம் செய்து கொள் என்று தாய் அறிவுரை வழங்கினார்.

தாயின் அறிவுரைப்படி சட்டத்தரணியை யுவதி மணந்தார். கடந்த ஜூன் 30 ஆம் திகதி வெலிகமவில் திருமணம் நடந்தது. யுவதியின் தகப்பனுக்கு இது தெரியாது.முதல் திருமணத்தைப் பற்றி சட்டத்தரணிக்கு தெரியப்படுத்துவது இல்லை என தாயும், மகளும் இணக்கம் கண்டு இருந்தனர். அதே நேரம் சட்டத்தரணியும் அவரது முதல் திருமணத்தைப் பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ வெளிப்படுத்தி இருக்கவில்லை.

திருமணம் பொய்களின் அடிப்படையில் நடந்தது ஆயினும் முதலிரவில் உண்மைகள் வெளிப்பட்டு விட்டன. இருவரும் கடந்த திருமண வாழ்க்கை பற்றி பரஸ்பரம் சொன்னார்கள். ஆயினும் புதிய மனைவி ஏற்கனவே கன்னி கழிந்தவர் என்கிற விடயம் சட்டத்தரணியை வெகுவாக கவலைப்பட வைத்து விட்டது.

எனவே அன்றில் இருந்து புதிய மனைவியை கடிந்து வந்திருக்கின்றார். கடந்த இரு மாத திருமண வாழ்க்கையில் யுவதியை ரொம்பவே சட்டத்தரணி இக்காரணத்தை முன்னிறுத்தி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். எப்போதும் யுவதியை சந்தேகக் கண்கள் கொண்டு பார்த்தார். இவற்றின் பின்னணியில் அடிக்கடி இருவரும் சண்டையிட நேர்ந்தது. சட்டத்தரணி நீலப் படங்கள் பார்க்கின்ற பழக்கத்துக்கு அடிமையானவர். அசாதாரண பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று யுவதியை வற்புறுத்தி வந்திருக்கின்றார்.

யுவதியை சங்கிலிகளால் பிணைப்பார். யுவதியின் வாயில் பிளாஸ்ரர் ஒட்டுவார். பல்கணி நிலத்தில் கிடத்துவார். துன்புறுத்தி இன்பம் காண்பார்.இச்சித்திரவதைகளை பொறுக்க முடியாத நிலையில் சட்டத்தரணியை அசாதரண செக்ஸிற்கு அழைத்து, கட்டிப் போட்டு, வாயில் துணிகளை அடைந்து, பிளாஸ்ரரை ஒட்டி. வீட்டின் கீழ்ப் பகுதிக்கு வந்து, சுத்தியலை எடுத்துச் சென்று, சாகும் வரை அடித்து இருக்கின்றார்.

பின்னர் சடலத்தை இழுத்துக் கொண்டு வீட்டுத் தோட்டத்துக்கு கொண்டு வந்து போட்டிருக்கின்றார். காருக்குள் சடலத்தை எடுத்துக் கொண்டு போய் எங்காவது வீச வேண்டும் என்பது இவரின் திட்டமாக முதலில் இருந்தது. ஆயினும் பயத்தின் காரணமாக திட்டத்தைக் கை விட்டார். குளித்து உடுப்பு மாற்றினார். இரத்தக் கறைகளை அகற்றினார். பொலிஸாரை அழைத்தார்.

புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 20 ஆபாச டி.வி.டிகளை கண்டு பிடித்தனர். அத்துடன் யுவதியைக் கட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்ற சங்கிலிகளில் சிலவற்றையும் கண்டு பிடித்தனர். யுவதியின் கையடக்கத் தொலைபேசியில் நீலப் படங்கள் சில சேமிக்கப்பட்டு இருந்தமையையும் கண்டு பிடித்தனர்.

மனைவியின் இரண்டாவது திருமணம் குறித்து இக்கொலைக்கு பின்னர்தான் லெப்டினண்ட் கணவனால் அறிந்து கொள்ள முடிந்தது. மகள் கொழும்பில் வேலை பார்க்கின்றார் என்றே தாய் பொய் சொல்லி வந்திருக்கின்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"