செக்ஸ் பலத்தை தரும் யோகா பயிற்சி


யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது.

இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம்.ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம்.

செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும்,பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர்.

மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்

யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை


பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர்.

கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம்.

செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"