சென்னை அழகு நிலையங்களில் விபச்சாரம்


சென்னையில் ஆயுர் வேத மஸாஜ் சென்டர்கள், ஸ்பா போன்ற பெயர்களில் இயங்கும் அழகு நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாறுவேடத்தில் சென்ற காவல்துறை, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 இளம்பெண்களை அதிரடியாக மீட்டது.

சென்னையில் ஆயுர் வேத மஸாஜ் சென்டர்கள், ஸ்பா என்ற போர்வையிலும் அழகு கலை நிபுணர்கள் பெயரிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளைக் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விபச்சார தடுப்பு பிரிவு மேற்பார்வையில் காவல்துறையினர், விளம்பரங்களில் வெளி வந்த தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் போல தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் பதிலளித்த நபர் ஆழ்வார் பேட்டையில் எல்டாம்ஸ் ரோடு சந்திப்பிலுள்ள சுகோஸ்பா பியூட்டி பார்லருக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த அழகிகளைக் காட்டி ரூ. 5 ஆயிரத்துக்குப் பேரம் பேசியுள்ளார்.

சுகோஸ்பா பியூட்டி பார்லரில் விபச்சாரம் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட காவல்துறையினர், பியூட்டி பார்லர் பொறுப்பாளர் சுனிதா என்பவரைக் கைது செய்ததோடு, அங்கிருந்த அசாம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்டனர்.

மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பிரபல விபச்சார பெண் தாதாவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவருமான கேரளாவைச் சேர்ந்த சுபா என்ற ஆன்சியின் மசாஜ் சென்டருக்கும் மாறு வேடத்தில் சென்ற காவல்துறையினர், அங்கும் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி ஆன்சி மற்றும் அவருக்குத் துணையாக செயல்பட்ட பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 7 இளம்பெண்களையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை மாநகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டிபார்லர் என்ற போர்வையிலும் மற்றும் அழகு கலை நிபுணர்கள் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை மயக்கி கவர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்குத் துணைபோகும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற போலி விளம்பரங்களைக் கண்டு வாலிபர்கள் தவறான வழிகளில் சென்று ஏமாந்து போகக்கூடாது" என்று போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"