சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்த கணவனை கொலை செய்த மனைவி


சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை துண்டு துண்டாக கூறு போட்டு சாக்குமூட்டையில் எடுத்து சென்று கொடூரமாக மனைவி எரித்துக் கொன்றார். மனைவியையும், அவருக்கு உதவிய மகனையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மணலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் அடுத்த மணலி பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள சுடுகாட்டில் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் நேற்று மாலை சாக்குமூட்டையை எடுத்து வந்து எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவருக்கு இதை பார்த்ததும் சந்தேகம் ஏற்பட்டது. உடனே மணலி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் குமரவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாக்குமூட்டையில் எரிந்து கொண்டிருந்தது ஒருவரது உடல் என்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் திருவல்லிக்கேனி பச்சையப்பன் தெருவை சேர்ந்த பத்மாவதி (45). அவரது மகன் யுவராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பத்மாவதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: எனது கணவர் மணி (55). தனியார் நிறுவன ஊழியர். எனது மகன் யுவராஜ் (35). டிப்ளமோ முடித்து விட்டு மாதவரத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிகிறான். திருமணமாகி எனது வீட்டு அருகிலேயே வசிக்கிறான். மகள் தனலட்சுமி தேனாம்பேட்டையில் கணவருடன் வசிக்கிறார்.

எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் தனியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை மடக்கி தகாத முறையில் நடந்து கொள்வார். அவரது அசிங்கமான செயலை பல தடவை கண்டித்துள்ளேன். சம்பந்தபட்டவர்களின் பெற்றோர் என்னிடம் முறையிடும் போது அவமானமாக இருந்தது. வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வந்தேன்.

அதேநேரம் எனக்கும் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். நேற்று முன்தினம் மாலை சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அதை கண்டுபிடித்த சிறுமியின் பெற்றோர் இன்று காலை என்னிடம் வந்து தகராறு செய்தனர். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான நான் கணவரை ஆத்திரம் தீர திட்டினேன். ஆனால் அவர் கொஞ்சம் கூட எதையுமே கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்தில், கடுங்கோபத்தில் இருந்த எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க தொடங்கினார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நான் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தேன். தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அந்த இடத்திலே அவர் சுருண்டு விழுந்தார். கை நாடியை பிடித்து பார்த்தேன் அசைவு இல்லை. மூச்சும் இல்லாததால் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அவர் இறந்ததை உறுதி செய்த நான் கொலை வழக்கில் சிறைக்கு சென்றுவிடுவோமோ என அஞ்சினேன். உடனடியாக எனது மகன் வீட்டுக்குச் சென்று விஷயத்தை கூறி அழுது புலம்பினேன்.

அவன் கொலையை மறைத்து விடலாம் என ஆலோசனை கூறினான். உடனடியாக இருவரும் மார்க்கெட்டுக்கு சென்று மீன் வெட்டும் கத்தியை வாங்கி வந்தோம். கணவரின் உடலை, தலை தனியாகவும், கை, கால்களை தனியாகவும், உடல் பகுதியை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டோம். தலை, கை, கால்களை ஒரு மூட்டையிலும் மற்ற பகுதிகளை இரண்டு மூட்டைகளிலும் போட்டு கட்டினோம். தலை இருந்த சாக்குமூட்டையை எடுத்துக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிவு செய்தோம்.

சாக்குமூட்டை மற்றும் பெட்ரோல் கேனுடன் யுவராஜ் பைக்கில் ஏறினேன். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேடி அலைந்தோம். மணலி பக்கிங்காம் கால்வாய் அருகே இருந்த சுடுகாட்டு பகுதியை சுற்றி வந்தோம். ஆள் நடமாட்டம் இல்லாததால் நாங்கள் கொண்டு வந்த சாக்குமூட்டை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தோம். அது எரிந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் எங்கள் மீது சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனால் சிக்கிக் கொண்டோம்.
இவ்வாறு பத்மாவதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்களின் வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரும் கொலைக்கு உடந்தையாக இருந்தார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கொலையை மறைக்க பகீர் திட்டம் போட்டு கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கொலை செய்ததை முழுமையாக மறைத்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து வீட்டிலிருந்து உடலை அப்புறப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன் பின்பே உடலை கூறு போடும் திட்டம் அரங்கேறியுள்ளது. ஏதாவது மறைவான இடத்தில் புதைத்த பின்பு துர்நாற்றம் வீசினால் போலீசில் மாட்டிக் கொள்வோம். எனவே, இறைச்சி கழிவு என கூறி பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளனர். அதன் பின்பே கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு பைக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் தேடி அலைந்தோம் என இருவரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றி விட்டால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ‘கணவர் காணாமல் போய்விட்டார். கண்டுபிடித்து தரவேண்டும்'' என புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். காணாமல் போனவர் பட்டியலில் எனது கணவரை போலீசார் தேடி கொண்டிருப்பார்கள். எனவே எங்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வராது என எண்ணியிருந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர். அவர்களின் திட்டம் தவிடு பொடியானதால் போலீ
சாரிடம் சிக்கிக் கொண்டனர்.

திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவில் ஒரு கட்டிடத்தில் 2வது தளத்தில் உள்ள தனது சொந்த வீட்டில்தான் பத்மாவதி கணவருடன் வசித்து வந்தார். அக்கம்பக்கத்தினருடன் பழகும் சுபாவம் கொண்டவர்தானாம். ஆனால் நேற்று காலையில் இருந்து அவர் யாரிடமும் மூச்சுகாட்டவில்லை என கூறப்படுகிறது. நேற்று மாலை சம்பவத்தை கேள்விபட்ட பக்கத்து வீட்டுகாரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டுக்குள் உடலை கூறு போட பயன்படுத்திய கத்தி ரத்தக் கறையுடன் இருந்தது. மேலும் 2 சாக்கு மூட்டையில் மணியின் உடல் பாகங்கள் கூறு போட்ட நிலையில் கட்டப்பட்டிருந்தது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"