பரீட்சையைத் தவிர்க்க கற்பழிப்பு ஆயுதத்தைக் கையில் எடுத்த மாணவி!

பரீட்சை எழுதுவதிலிருந்து தப்பிப்பதற்காக, தனது நண்பருடன் பல மணி நேரம் உறவு வைத்துக் கொண்டு, தன்னை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக நாடகமாடி அனைவரையும் அதிர வைத்துள்ளார் வாய் பேச முடியாத 17 வயது மும்பை மாணவி.

டெல்லி பாலியல் பலாத்காரச் செயல் நாடு முழுவதையும் அதிரவைத்தது என்றால் அந்த பாலியல் பலாத்காரத்தை பயன்படுத்தி ஒரு மாணவி நாடகமாடியிருப்பது அனைரையும் பதற வைத்துள்ளது.

மும்பை புறநகர்ப் பகுதியான டிராம்பேவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படித்து வரும் மாணவி இவர். 17 வயதாகும் இவர் வாய் பேச முடியாது. சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு உரிய நேரத்தில் போகவிலக்லை. இதையடுத்து அவரது தந்தை போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் நள்ளிரவுவாக்கில் அந்த மாணவி கலைந்த உடை, தலையுடன் வீடு வந்து சேர்ந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன என்று விசாரித்தபோது தன்னை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து விட்டதாக சைகையில் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரைகாவல் நிலையம் கூட்டிச் சென்று போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தன்னை 2 பேர் கொண்ட கும்பல் கடத்திக் கொண்டு போனதாகவும், சாய்நாத் நகரில் உள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்தில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அதை வீடியோவில் படமாக்கிக் கொண்டதாகவும், அதன் பின்னர் தப்பி ஓடி விட்டதாகவும் கூறினார். இதையடுத்து போலீஸார்
மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் ஈடுபட்ட டாக்டர்கள் பெரும் குழப்பமடைந்தனர். காரணம், மாணவியிடம் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறி சற்றும் இல்லை என்பதால். இதுகுறித்து போலீஸாருக்கும் அவர்கள் தெரிவித்தனர்.

குழப்பமடைந்த போலீஸார் மாணவியிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தியபோது குட்டு உடைந்தது. அதாவது பள்ளியில் தேர்வு வருகிறது. சரியாக படிக்கவில்லை மாணவி. இதனால் தேர்விலிருந்து தப்பிக்க அவர் குயுக்தியாக யோசித்துள்ளார்.

தனது பாய் பிரண்ட் வீட்டுக்குப் போயுள்ளார். அவருடன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் உல்லாசமாக இருந்து உறவு வைத்துக் கொண்டார். அதன் பின்னர் கற்பழிப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மருத்துவப் பரிசோதனையின்போது உறவு கொண்டதை மட்டும்தான் டாக்டர்கள் கணக்கில் கொள்வார்கள் என்று அவர் தப்பாக கணக்குப் போட்டு விட்டார். கடைசியில் மாட்டிக் கொண்டார்.

இந்த மாணவியின் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அவரிடமும், அவரது பாய் பிரண்ட்டிமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"