100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி!


சீனாவில் 11 வயதுச் சிறுமி ஒருவர் மூன்று மாதங்களுக்கு இடையில் குறைந்தது 100 தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இவரின் பெயர் லேலே. Henan மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டில் இருந்து இக்கற்பழிப்பு இடம்பெற்று இருக்கின்றது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் இது வெளியுலகத்துக்கு தெரிய வந்து உள்ளது.

இவர் பாலியல் தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளார். அத்துடன் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் இவரின் தாய் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று இணையத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்து உள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி லேலே 23 வயது காதலனுடன் சென்று இருக்கின்றார். காதலன் இவரை வீடியோ கடை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பல தடவைகள் கற்பழித்து விட்டார்.

யாருக்கும் இது பற்றிச் சொன்னால் பாடசாலையில் எல்லோருக்கும் பரப்பி விடுவேன் என்றும் குடும்பத்தில் எல்லோரையும் கொன்று அழித்து விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டி இருக்கின்றார். கற்பழிப்பு இடம்பெற்று இரு நாட்களுக்கு சிறுமியை வேலைக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்று இருக்கின்றார்.

தாய்க்கு சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றார். அம்மா என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். என்னால் இனி மேல் படிக்க முடியாது. வேலைக்கு என்று சொல்லி அழைத்துச் செல்கின்றார். நான் மீண்டும் வருவேன். கட்டாயம் வந்தே தீருவேன்.

இவ்வாறு எழுதி வைத்து விட்டு சிறுமி சென்றார். மகளைத் தேடி அலைந்தார் தாய்.மகளைக் காணவில்லை என்று பொது இடங்களில் அறிவித்தல்கள் ஒட்டினார். சிறுமி கடத்தப்பட்டு இருக்கின்றார் என்றே பொலிஸார் நம்பினர்.

இந்நிலையில் தொலைபேசி அழைப்பு தாய்க்கு வந்தது. இவரின் மகளை விபச்சார விடுதி ஒன்றில் கண்டார் என்று அந்நபர் தொலைபேசியில் கூறி இருக்கின்றார். குறித்த விபச்சார விடுதிக்கு பொலிஸாருடன் சென்று மகளை மீட்டார் தாய்.விபச்சார விடுதியில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார் என்று தாய்க்கு இச்சிறுமி கூறி இருக்கின்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட நாள் முதல் 100 தடவைகளுக்கு மேல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி இருக்கின்றார். ஒரு நாள் நான்கு பேர் கூட்டாக ஐந்து மணித்தியாலங்கள் வரை கற்பழித்தனர் என்றும் கூறி இருக்கின்றார். இவருக்கு கிடைத்து வந்த பணம் முழுவதையும் காதலன் அபகரித்து விட்டான் என்றும் கூறி இருக்கின்றார்.

இவர் கற்பழிக்கப்பட்டமை சம்பந்தமாக ஏழு பேர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து உள்ளார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"