சுய இன்பத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள்


உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது.

சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (Addict)விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.

துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுய இன்பப் பழக்கம் குறித்து ஆங்கில மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

சுய இன்பப் பழக்கத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது தவறான கருத்து. உடலுறவின் போது உடல் எப்படி இயங்குகிறதோ, எப்படி இன்பமும் உச்ச நிலையை அடைகிறதோ, அதேபோன்ற அனுபவம்தான் சுய இன்பத்திலும் ஏற்படுகிறது. மேலும் இளைஞர்களும், பெண்களும் பாலியல் வேட்கை அதிகரிக்கும் போது தவறுகள் செய்யாமல் இருக்கவும், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் விழாமல் பாதுகாப்பாக இருக்கவும் ஆரோக்கியமான மாற்றாக நல்ல வடிகாலாக சுய இன்பப் பழக்கம் அமைகிறது. எனவே சுய இன்பத்தில் பாலியல் உளவியல் நிபுணர்களும் உலகம் முழுவதும் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புள்ள நாடுகளில் சுய இன்பப் பழக்கத்திற்கு உதவியாக, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்ற செயற்கைச் சாதனங்கள் கடைவீதிகளில் விற்கப்படுகின்றன. அங்கு பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற, பின் விளைவுகளை ஏற்றுக் கொள்கிற நெறி முறையற்ற பாலியல் வாழ்க்கை பெருகிவிட்டது. ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும், ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், அதற்கு வசதியாக சாதாரண காரணங்களுக்காக சுலபமாக விவாகரத்துப் பெறுவதும், ஓரினச் சேர்க்கையும், மேற்கத்திய வாழ்க்கைப் போக்குகளாக மாறிவிட்டன.


ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்பஞ்சர் போன்ற மாற்றுமுறை மருத்துவங்களில் சுய இன்பப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஏராளமான மருந்துகள் உண்டு. இவை பற்றி மாற்றுமுறை மருத்துவர்கள் பேசினால், எழுதினால், விளம்பரம் செய்தால் "அவை எல்லாமே விஞ்ஞான விரோதமானவை" என்னும் 'தவறான கருத்துகள் பொய்யான விளம்பரங்கள்' என்றும் "இளைஞர்கள் ஏமாற வேண்டாம்" என்றும் ஆங்கில மருத்துவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் 'சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்' என்பதை நிரூபிக்க முடியுமா? சில மருத்துவர்கள் சுய இன்பப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர். அது என்ன அளவு? உச்சி வெயில் நேரத்திலும் கூட நிர்வாணத் திரைப்படங்களைப் பார்த்து உணமேறித் திரியும் நரம்பு நோயாளிகளுக்கு (இளைய பாரதம்) என்ன அளவு தேவை?

பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில் ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றி தான் தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர்.

பிறந்த குழந்தைக்கும் எச்சில் சுரக்கும். ஆனால் விந்து சுரக்க பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது. விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?

மணமாகாமல், வயதாகிக் கொண்டே செல்லும் இளைஞர்கள், யுவதிகளிடம் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு எழுச்சி மேலோங்கித் துயரப்படுத்தும் சந்தர்ப்பங்களில் சுய இன்பப் பழக்கத்தில் மணவாழ்க்கயில் மனைவி நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சுய இன்பம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலைகள் அனைத்து முறைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஏற்கக் கூடியவை. ஆனால் இன்னு பல்வேறு மருத்துவ சஞ்சிகைகளில் இளைஞர்களும், பருவப் பெண்களும் கேள்வி பதில் பகுதியில் தெரிவிக்கும் அனுபவங்களையும், எழுப்பும் சந்தேகங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும்.

நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில் நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா? வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?

ஆங்கில மருத்துவத்திலோ உயர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D. அவர்களால் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது நவீனமான அடிப்படைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டது. மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்து முழுமையாக ஆய்வு செய்து துயருற்ற மனிதர்களை நிரந்தரமாகக் குணப்படுத்தும் பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறை ஹோமியோபதி. இந்த நவீன மருத்துவத்தில் சுய இன்பப் பழக்கத்திலிருந்து மீளவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும் பல மருந்துகள் உள்ளன.


பிக்ரிக் ஆசிட்:
அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).

அனகார்டியம்:
சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல் (இதுதான் இளமைக்கு அடையாளமா?)

காலிபுரோமேட்டம்:
சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை.

ஜெல்சிமியம்:
சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம்.

கோனியம்:
நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல்.

நேட்ரம்மூர்:
பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும்.

சைனா:
கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.

ஸ்டாபிசாக்கியா:
சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல்.

அக்னஸ்காஸ்டஸ்:
நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல்.

பிளாட்டினா:
பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில்

ஜிங்சும்மெட்:
மாதவிடாய் நாட்களில் சுய இன்பத்தில்

கலாபியம்
கீரிப்பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் (Pruritus vulvae).

மூரக்ஸ்:
ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில்

ஹையாசியாமஸ்:
பிறப்புறுப்பை ஆடை நீக்கி காட்டுதல், ஆபாசமாகப் பேசுதல்.

ஓரிகானம் 10 கிரரியோலா:
பெண்ணுறுப்பின் கடுமையான தினவால் செக்ஸ் உணர்வு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல்.

ஸ்டாபிசாக்ரியா 10 அபிஸ்மெல்:
விதவைகளுக்கு பாலுணர்வு தூண்டுதல், கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படுதல்.

இன்னும் பல மருந்துகள் உள்ளன. தெரிவான சிறப்பான சிகிச்சைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மனநிலை உடல்நிலைக்கேற்ற மருந்தை உரிய வீரியத்தில் உரிய கால அளவில் அனுபவமிக்க ஹோமியோ மருத்துவர்கள் கொடுத்து வரும்போது சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், பின் விளைவுகளின் தாக்குதல்களுக்கு ஆளானவர்களையும் குணப்படுத்த முடியும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"