இனச் சேர்க்கைக்கு பின் நாய்களின் உறுப்புக்கள் மாட்டி கொள்வது ஏன்?


குளிர் காலம் முடியும் நேரத்தில் நாய்களின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது.அப்பொழுது பெண் நாய்களிடமிருந்து ஒரு திரவம் வெளிப்படும். இந்த ஈஸ்ட்ரஸ் 10-12நாட்கள் நீடிக்கும். அப்போது அது போகுமிடமெல்லாம் தன் பாதச்சுரப்பியின் மூலம் ஒருவித வாசனையை ஆண் நாய்களுக்கு “ அழைப்பாக” விட்டுச் செல்லும், இந்த வாசனையால் குஷியான ஆண் நாய்(குதூகலமாக, மிடுக்காக கிளம்பிவிடும்.

தனக்கேற்ற இணையைக் கண்டறிந்தவுடன் தன் காதல் கோரிக்கையை பவ்யமாக வைக்கும். இதை ஆரம்பத்தில் கேர்லெஸாக எடுத்துக் கொள்ளும் பெண் நாய் தன் வாலை அட்ஜெஸ்ட் செய்து கர்வ நடை காட்டும். அதெல்லாம் கொஞ்சநேரம் தான், பின் ஆண் நாயின் கொஞ்சும் குரலிலும், முகபாவத்திலும் சொக்கிபோய், பிரிக்கமுடியாத அளவிற்கு ஆண் நாயுடன் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் பெண் நாய்.

ஆண் நாயின் பிறப்புறுப்பில் விசேஷமாக தண்டில் குருத்தெலும்பு இருக்கும். பெண் நாயின் “உள்ளே” நுழையும் போது நார்மலாகதான் இருக்கும்!அதனால் நுழையும் போது தடங்கல் இல்லை!! சேர்கையின் கிளைமேக்ஸில் ஆண் நாயின் பிறப்புறுப்பில் இருக்கும் குருத்தெலும்பு (Os pedis) சேர்க்கையின் போது ஆண் உறுப்பின் பல்ப் பகுதி பொங்கும் குருதியினால் வீங்குவதாலும், சுற்றி உள்ள பெண் உறுப்பு பகுதி ஆசையாக? அது மாட்டிக் கொள்வதால் சேர்க்கை முடிந்த பிறகு அரை மணி நேரத்திற்கு விடுபட முடியாத (பேரின்ப? துன்பம்?) நிலையில் வெட்கத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் இருக்கும்! நாய்களின் தெருவோர கப்பிலிங் காட்சிகளை அனைவரும் கண்டிருப்பீர்கள், அந்த காட்சிக்கு இதுதான் காரணம்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"