தம்பதிகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடலாம்?


ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது.இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உறவில் ஈடுபடுபவர்கள் கூட நாளடைவில் குறைத்துக் கொள்ளக் கூடும்.

வீட்டுச் சூழல், லைஃப் ஸ்டைல், தனிமையின்மை, நேரம் கிடைக் காமை போன்ற காரணங்களால் செக்ஸில் ஈடுபடுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரலா ம். புதிதாக திருமணமானவர்களு க்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும்.

ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத் துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கி றார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மை யில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது.

எனவே அதிகளவில் உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை. நியூராட்டிசம் பிரச் சினை இருப்பவர்கள் எதற்கெடுத் தாலும் கோபப்படுவார்கள், எரிச்ச ல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவ ர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப்பெரிய நிவாரண மாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரி யதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்து வர்கள்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடி யை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக் கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டு களுக்கு சோதனை நடத்தப்பட்ட து. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையா ம்.
பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அள வில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம். ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாக வில்லை. காரணம், வாரத்திற் கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.

நரம்பியல் கோளாறுகள் தீரும்
4வது ஆண்டு வாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூல ம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோ ளாறுகளுக்கு நல்ல மருந்து என் பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பக்குவமடையும் மனம்
எனவே புதிதாக திருமணமானவர் கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர் வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொ ண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியா கவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்து வர்கள்.எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடை யவர்கள், டென்சன் ஆகும் குண முடையவர்கள், காலாகாலத் தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"