செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா?



புதிதாக வாங்கும் செல்போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க லாம். ஒருசெல்போனுக்கு அதிகபட்சம் 3வருடங்கள்வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்கு மேல் இன்ஷூரன்ஸை புதுப்பி க்கும்போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும்.

செல்போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களை பாலிசிதாரர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத்தெளிவாகப் படித்துப்பார்ப்பது அவசியம். ஏனெனில், இந்த இன்ஷூரன்ஸில் நிபந்தனைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

சில நிறுவனங்களில் செல்போன் தண்ணீரில் விழுந்தால் கிளைம் தரமாட்டோம் என்ற நிபந்தனை இருக்கும். இன்ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்தில் செல்போன் தொலைந்து போனால் இத்தனை சதவிகிதம்தான் கிளைம் கிடைக்கும் என்றும் நிபந்தனை விதித்திருப்பார்கள்.

செல்போன் தொலைந்துவிட்டது அல்லது திருடு போய்விட்டது என்ற காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும்போது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவை. சில இன்ஷூரன்ஸ் நிறு வனங்களில் செல்போன் காணாமல் போன சம்பவத்தைக் காவல்துறை முதல் தகவல் அறிக்கை யாகப்பதிவு செய்யவில்லை என்றாலும், காவல்துறையின் சமுதாயப் பதிவேட்டு ரசீது இருந்தால் போதும் எனக்கூறுகின்றன. எனவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே எதற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது என்பதை பாலிசியைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.

பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதையே தவிர்த்து வருகின்றன. ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு ஒரு முறை புதுசெல்போன் வாங்கும் பழக்கத்தைப் பலரும் வைத்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே போனை தொலைத்திருக்கலாம் என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சந்தேகப்படுவது தான் இதற்கு காரணம்.

செல்போன் தொலைந்து போனால், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம் . அதேபோல, முதல் வருடத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும் அதில் அதிகபட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே அந்த இன்ஷூரன்ஸைத் தொடர முடியும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"