மொபைலில் செக்ஸ் படம் காட்டி சில்மிஷம் செய்த ஆசிரியர்


சேலம், இரும்பாலை அடுத்த ஆரியகவுண்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சிவகாமசுந்தரி. இவர், கடந்த, 4ம் தேதி, மருத்துவ விடுப்பில் சென்றதால், இடைநிலை ஆசிரியர் ராஜிவ்காந்தி, கூடுதலாக, தலைமையாசிரியர் பணியை மேற்கொண்டார்.

அப்போது, மாணவியர் சிலரை, தனி அறைக்கு அழைத்து சென்று, அவர்களை, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து, ஆசிரியர் ராஜிவ்காந்தி தலைமறைவாகி விட்டார். அவர் மீது, கடந்த, 12ம் தேதி, ஜாமினில் வெளிவர முடியாத, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, இரும்பாலை போலீசார் தேடி வந்தனர்.

அதே நாளில், ராஜிவ்காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அதன் உத்தரவு, போலீசாருக்கு தெரியாமல் வழங்கி, அவரை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சேக்தாவூத் தப்ப செய்து விட்டார். அதையடுத்து, போலீசாரின், பிடி இறுகியதால், வேழி வழியில்லாமல், ஆசிரியர் ராஜிவ்காந்தி, கடந்த, 17ம்÷தி, சேலம், நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரபீக் உத்தரவிட்டதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராஜிவ்காந்தியை, கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, மூன்று நாள் அனுமதி கோரி, கடந்த, 18ம் தேதி, இரும்பாலை போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, ஒருநாள் அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட் ரபீக் உத்தரவிட்டார்.

ராஜிவ்காந்தி வாக்குமூலத்தில் கூறியதாவது:
பள்ளி தலைமையாசிரியர் சிவகாமசுந்தரி விடுமுறையில் சென்றதால், அப்பணியை, நான், கூடுதலாக கவனித்து வந்தேன். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மாணவியரிடம் நெருங்கி பழகினேன். 36 வயதான எனக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த சபலத்தில், மாணவியரை தனியாக அழைத்து சென்று, பாலியல் கொடுமை செய்தேன்.

மொபைலில், பதிவு செய்து வைத்திருந்த, செக்ஸ் படங்களை, மாணவியருக்கு, அடிக்கடி காட்டினேன். இதுபோன்ற படங்களை பார்த்து தான், நான், ஆசிரியர் ஆனேன். அதேபோல, நீங்களும் இந்த படத்தை அடிக்கடி பார்த்தால், அறிவு வளரும், நன்றாக படிப்பீர்கள் என, ஆசை வார்த்தை கூறினேன். இருந்தும் மாணவியர் சிலர், இதற்கு உடன்படவில்லை. அவர்களை, வலுக்கட்டாயப்படுத்தி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினேன்.

அந்த கொடுமையை தாங்க முடியாத மாணவியர், பெற்றோரிடம் கூறி, பள்ளிக்கு வர மறுத்ததால், இந்த சம்பவம் வெளியே தெரிந்து விட்டது. இவ்வாறு ராஜிவ்காந்தி, வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதையடுத்து, மாணவியரை பாலியல் கொடுமைக்கு பயன்படுத்திய, மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"