பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து வேகவைத்து சாப்பிட நினைத்த விசித்திர மனிதன்


நூறு பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்த பிறகு, வெந்நீரில் அவர்களை வேகவைத்து சித்ரவதை செய்து பின்னர் பெண் கறி தின்ன வேண்டும் என்று கொரூரமாக திட்டம் போட்டதாக நியூயார்க் நகர போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்ப்யூட்டரில் 100 பெண்களின் பெயர்களை அவர் பதிவு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர போலீஸ் துறை அதிகாரி கில்பர்ட்டோ வல்லே.

இவர் 100 பெண்களை கடத்தி பலாத்காரம் செய்ய திட்டமிட்டதாகவும்,பின்னர் அவர்களை சித்ரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும் புகார் எழுந்தது. அத்துடன், கொலை செய்யப்படும் பெண்களின் உடல்களை சமைத்து தின்ன கொடூரமாக நினைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக அவரை கண்காணித்தனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் அவருடைய நடவடிக்கைகள் இருந்தால், எப்.பி.ஐ. புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கில்பர்டோவை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் கோர்ட்டில் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து நியூயார்க் போலீசார் கூறியதாவது: கில்பர்ட்டோவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த கம்ப்யூட்டரில் 100க்கும் அதிகமான பெண்களின் படங்கள், அவர்களுடைய முகவரி, விவரங்கள் அடங்கிய பைல் இருந்தது. அத்துடன் பெண்களின் உடல் அமைப்புகளையும் அவர் விரிவாக குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் 100 பெண்களில் சிலருடைய வீட்டையும், அவர்கள் வேலை செய்யும் இடங்களையும் கில்பர்ட்டோ தொடர்ந்து கண்காணித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை வெந்நீரில் போட்டு வேகவைத்து அவர்கள் படும் சித்ரவதையை பார்த்து ரசித்து கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பலருடன் கில்பர்ட்டோ இன்டர்நெட்டில் சாட்டிங் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். இவ்வாறு போலீசார் கூறினர். இதற்கிடையில், ஜாமீன் கேட்டு மன்ஹாட்டன் கோர்ட்டில் கில்பர்ட்டோ மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹென்றி பிட்மேன், கில்பர்ட்டோ மீதான குற்றச்சாட்டுகள் பயங்கரமாக உள்ளன. நீதிபதியாக எனது 16 ஆண்டு வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை பார்த்ததில்லை என்றார்.

கில்பர்ட்டோ சார்பில் ஆஜரான வக்கீல் ஜூலியா கட்டோ, ஜாமீன் கோரி ஆவேசமாக வாதாடினார். நியூயார்க் போலீஸ் துறையில் கில்பர்ட்டோ 6 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்புள்ள அதிகாரியாக பணியாற்றி உள்ளார். பெண்களை கடத்தவும், பலாத்காரம் செய்யவும், கொலை செய்யவும் பேசினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அது வெறும் பேச்சுதான். நிஜத்தில் அவர் அப்படி செய்ய நினைக்கவில்லை. எனவே, ஜாமீன் வழங்க தகுதியானவர்தான் என்றார். எனினும், கில்பர்ட்டோவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"