அந்த செல்போனை தொலைத்த நடிகை..!


இன்றைய தேதிக்கு தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். பூர்வீகம் கேரளா. இப்போதும் அங்கிருந்து வந்துதான் நடித்துவிட்டுப் போகிறார்.

நடிகையின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்தாலும், தனிப்பட்ட முறையில் அம்மணி ஏக சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கை. ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், அம்மணிக்கு மார்க்கெட் செம ஸ்ட்ராங்.. அதைவிட ஹீரோக்களிடம் மவுசு அதைவிட ஸ்ட்ராங் என்பதால்… வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. சம்பளமும் கோடியைத் தொடுகிறது.

சமீபத்தில் கேரளாவுக்குப் போயிருந்த நடிகை, அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹூக்கா ஸ்பெஷல் ஹோட்டலுக்கு விசிட் அடித்துள்ளார்.ஹூக்கா மப்பு ஏற ஏற… அம்மணி சகலத்தையும் மறந்து எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதே தெரியாமல் வந்து சேர்ந்திருக்கிறார்.

இன்றைய நிலையில் ஒரு நடிகைக்கு உயிர்த்துடிப்பே செல்போன்தான். காலையில் எல்லாம் தெளிந்த பிறகு பார்த்தால்…
 நடிகையின் சகல தொடர்புகள் மற்றும் ரகசியங்கள் அடங்கிய செல்போன் காணவில்லையாம். துடிதுடித்துவிட்டாராம்...மப்பு ஜப்பென்று இறங்கிவிட, திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வெளியில் சொல்லவும் முடியாமல், எப்படி தேடுவதென்றும் தெரியாமல் விழித்திருக்கிறார் நடிகை.

அடுத்த நாள் நடிகையின் வேறொரு நம்பருக்கு ஒரு கால் வந்திருக்கிறது. பேசியவர் ஒரு இளைஞர். எடுத்த எடுப்பில் நடிகையை கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறார். “ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, இப்படியெல்லாமா ஆபாசமாக நடந்து கொள்வாய். உன் செல்போனில் உள்ள சென்சார் செய்யப்படாத வீடியோக்கள், ஆபாச பேச்சுக்களை அம்பலத்துக்கு விட்டால்…,” என்று கேட்டு மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

நடிகை சப்தநாடியும் ஒடுங்கி, கதிகலங்கி நின்றாராம். எப்படி இந்த சிக்கலிலிருந்து வெளிவருவது… அந்த முக்கிய செல்போனை மீட்பது என்று தெரியாமல் விழிக்கிறாராம்.

முழுக்கதையையும் கேட்ட அந்தரங்கமான சில தோழிகள், என்னடி இது… இப்படி சொதப்பிட்டியே என்று தலையிலடித்துக் கொண்டார்களாம்!

எப்படியோ.. விரைவிலேயே இணையதளங்களை கதிகலங்க வைக்கும் வீடியோக்கள் வருவது மட்டும் உறுதி என்று கண் சிமிட்டுகிறார்கள் கோலிவுட்காரர்கள்!!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"