போதை இளைஞர்களே! உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை!!


செக்ஸுக்கு நெருக்கமான விஷயமாகப் பலரும் போதைப் பொருட்களைத்தான் நாடுகின்றனர். தன்னுடைய உணர்வுகளைத் தணித்துக்கொள்ள நினைக்கும் பலர் பெண்ணை நாடுவதற்கு முன்பு தேடுவது போதை வஸ்துகளைத்தான்.

பெருநகரங்களில் இப்போது எல்லாம் 'ரேவ் பார்ட்டிகள்' என்கிற சட்டத்துக்குப் புறம்பான கொண்டாட்டங்கள் சகஜமாகிவிட்டன. இத்தகைய பார்டிகளின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? சரளமாகப் புரண்டோடும் போதை வஸ்துகள்!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் இத்தகைய பார்ட்டிகளுக்குச் சொல்லும் காரணம். ''வேலைப் பளு சார். ஓவர் ஸ்ட்ரெஸ்... சும்மா ரிலாக்சேஷனுக்காகத்தான்...'' இன்னும் பலர் சமூகத்துடனான விசாலமானத் தொடர்புகளுக்கு இதுபோன்ற பார்ட்டிகள் மிகப் பெரிய வாசலாக அமைகின்றன என்றும் சொல்கிறார்கள்.மனிதனுக்குக் காரணம் சொல்லக் கற்றுக்கொடுக்கவா வேண்டும்?

உண்மையில், போதைச் சமாச்சாரங்களை உட்கொண்டால் அதிக நேரம் உறவுகொள்ள முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை. போதைப் பொருட்களை உட்கொள்வது உடலுறவுத் திறனை எந்த விதத்திலும் அதிகரிக்காது. அதே சமயம் தன்னுடைய இணையிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளத் தூண்டும். தன் மீது உயிரையே வைத்திருக்கிறவள் என்கிற நல்லெண்ணத்தை எல்லாம் துடைத்து, வக்கிரப் புத்தியைக் கொடுக்கும்.

நாளடைவில் செக்ஸ் மீது உள்ள ஆர்வத்தையே அது துண்டித்துவிடும். அடுத்து ஆண்களுக்கு விறைப்புத் தன்மையில் பிரச்னையை ஏற்படுத்தும். கூடவே ஹார்மோன் குறைபாட்டையும் உருவாக்கும். குடிக்கு அடிமையான பல ஆண்களுக்கு, ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களே விந்தில் இருக்கும். போதைப் பழக்கம் உள்ள பெண்ணாக இருந்தால் மாதவிடாய்ச் சுழற்சியில் சிக்கலும் கருமுட்டை வெளியாவதில் பாதிப்பும் ஏற்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"