பெற்ற தாயை கற்பழிக்க முயன்று, கொலை செய்த 13 வயது சிறுவன்


Call of Duty வீடியோ கேம் ஐ விளையாட விடவில்லை என்ற காரணத்துக்காக தனது சொந்த தாயை கற்பழிக்க முயன்று, கொலைசெய்த 13 வயது சிறுவனால் அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Noah Crooks, 13 வயதான் சிறுவன். இவன் தனது கடந்த பரீட்சையில், குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறான். இதனை கண்டித்த இவனது தாயான 37 வயதாகும் Gretchen Crooks, அவன் வழமையாக விளையாடி வந்த Call of Duty வீடியோ கேம் ஐ பறித்து வைத்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தாயை கற்பழிக்க முயன்று, முடியாமல் போக, அவரை 22 கலீபர் ரக துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான். இச்சம்பவத்தை திசைதிருப்பும் வகையில், அவசர பொலீஸ் இலக்கமான 911 க்கு தொடர்பு கொண்டு,எனக்குள் ஏதோ புகுந்துவிட்டது…

எனது தாயை கற்பழிக்க போகிறேன்…. எனது தாயை கற்பழிக்க போகிறேன்…. ஆனால் என்னால் முடியவில்லை…நான் நானாக இல்லை… எனக்கு ஏதோ ஆகிவிட்டது…..என பலவாறாக உளறியுள்ளான்.அத்துடன் தனது தந்தையான William Crooks க்கு “Dad this is Noah. I killed Mom accidentally. I regret it. Come home now please” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலீசார், அரை நிர்வாணமாக கிடந்த தாயின் உடலை மீட்டனர். குறித்த சிறுவனையும் கைது செய்தனர்.அவன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், Call of Duty கேம் ஐ பறித்ததால் இக் கொடூர சம்பவம் நடந்தேறியது வெளிச்சத்துக்கு வந்தது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"