சத்தமானது சங்கீதாமாக ஒலிக்கும் இடம் படுக்கை அறை. கிசுகிசுப்போ, உரத்த குரலோ எதுவென்றாலும் அந்த நேரத்தில் அதிகம் சத்தம் எழுப்புவது பெண்கள்தான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
படுக்கை அறையிலும் கூட பெண்கள்தான் சவுண்டு பார்ட்டிகள் என்று கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 1171 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவர்கள் 566 பெண்களும் 605 ஆண்களும் கலந்து கொண்டனர். அவர்களிடம் படுக்கை அறையில் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டதில் 70 சதவீத ஆண்கள் தங்களுடைய மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக ஒத்துக் கொண்டனர். அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர்.
பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு இருக்கிறது.
அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் டிரேசி காக்ஸ் கூறியுள்ளார்.
இருப்பினும் பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம்.
சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்