15 வயதிற்குமுன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!


இந்தியாவில் 15 வயதிற்குமுன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 வயதுமுதல் 19 வயது க்குட்பட்ட வர்களில் 8 சதவிகிதம் பேர் 15 வயதுக்கு முன்னரே செக்ஸ் வைத்து க்கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதுடைய ஆண்களில் 3 சதவிகிதம் பேர் மட்டுமே உடலுறவு வைத்துள்ளனர் என்பது தெரிவித்துள்ளனர்.

கரீபியன் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் 15 வயதிற்கு முன்பு 17 சதவிகிதப் பெண்கள் அதிக அளவில் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் அதே அளவிற்கு பெண்கள் முன் னேறி வருவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று தெரிவிக் கிறது.

இதேபோல் உலகம் முழுவதும் 15 வயது முதல் 19 வயதிற்குள் தாயாகும் பெண்களின் எண்ணிக்கை 16 மில்லியன் அளவாக உள்ளதாக தெரிவிக்கிறது WHO வின் கணக்கெடுப்பு ஒன்று.

இதில் 95 சதவிகிதம் இளம் தாய்மார்கள் இருப்பது வறுமை சூழ்ந்த நாடுகளில்தான்தான். பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளைவிட குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 5 மடங்கு அதிகம் என்று தெரிய வந்துள்ளது. பங்காளாதேஷ், பி ரேசில், காங்கோ குடியரசு, எத்தியோப் பியா, இந்தியா, நை ஜீரியா மற்றும் அமெ ரிக்க நாடுகளில் இளம் தாய்மார் கள் பாதிக்கும்மேல் இருப்பது கணக் கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பேர் 15 முதல் 19 வயது வரை உடைய பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது உடல்ரீதியான நோய்களை உருவாக்கும் குறிப் பிட்ட வயதிற்குமுன்னரே உறவில் ஈடுபட் டால் எய்ட்ஸ் நோய்தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள் ளனர். மேலும் அனீமியா, மலேரியா, போ ன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிக ம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இளம் வயதில் கர்ப்பமடைவது எந்த அளவிற்கு உயிருக்கு ஆபத்தானதோ அதே போல பாதுகாப்பற்ற முறையில் கருக்க லைப்பில் ஈடுபடுவதும் உயிருக்கு ஆபத் தானதுதான். நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் மட்டும் ஆண்டுக்கு 2.5 மில்லிய ன் வளர் இளம் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைக்கில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"