சீனாவில் ஒரு குழந்தை கொள்கையினால் அதிர்ச்சி தரும் கட்டாயக் கருக்கலைப்பு


சீனாவில் கட்டாயக் கருக்கலைப்பு தொடர்பான புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சீனாவில் பெண் ஒருவருக்கு அந்நாட்டு நிர்வாகம் கட்டாயக் கலைக்கலைப்பு செய்வது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

Shaanxi பிரதேசத்சைத் சேர்ந்த Feng Jiamei என்ற பெண்ணுக்கே இவ்வாறு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏழு மாத கர்ப்பிணியான Feng Jiamei க்கு இவ்வாறு கட்டாயக கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்வதற்காக செலுத்த வேண்டிய அபராதப் பணத்தை செலுத்தாத காரணத்தினால் குறித்த பெண்ணின் கரு கட்டாயமாக கலைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஒரு குழந்தை என்ற கொள்கையினால் பெண்கள் கட்டாய கருக்கலைப்பிற்கு உட்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது மனைவியை பலவந்தமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கட்டாயக் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டதாக Feng Jiamei இன் கணவர் தெரிவித்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"