6ம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பலாத்காரம்

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ரிசர்வ் படை கான்ஸ்டபிள் ஒருவர் அரச உயர் நிலைப்பாடசாலையில் 6ம் வகுப்பு படித்த மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துளாளர்.

பின்னர் குறித்த மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் மாநிலம் லாங்டிங் மாநிலத்தில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் அருகே கடந்த 2ம் திகதி சிறுமி ஒருவர் சுயநினைவின்றி மீட்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, நேற்று அவருக்கு நினைவு திரும்பியது.

அவரை விசாரித்தபோது, இந்திய ரிசர்வ் படை கான்ஸ்டபிளான லுக்பாம் யோங்கம் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்தார்.

இதையடுத்து லுக்பாமை உள்ளூர் மக்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். லுக்பாமை தண்டிக்கக் கோரி உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தில் கூடினர்.

மேலும் மருத்துவ பரிசோதனைக்காக லுக்பாமை அழைத்துச் செல்லும்போது காவல் நிலைய வாசலில் கூடியிருந்த மக்கள் அவரைத் தாக்கினர்.

இதையடுத்து பொலிசார் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"