முலைப் பாலில் ஐஸ்கிரீம் தயாரிக்க தடை

பெண்களின் முலைப் பாலில் இருந்து ஆக்கப்பட்டு, லண்டனில் உள்ள உணவகம் ஒன்றால் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த பேபி ககா என்கிற பெயரிலான ஐஸ்கிரீம் தயாரிப்பு முடிவுக்கு வந்து விட்டது.

ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு இந்த ஐஸ்கிரீம் கேடு ஏற்படுத்தும் என்று பொதுமகன் ஒருவர் ஆதாரங்களுடன் முறையிட்டமையை அடுத்து வஸ்மினிஸ்ரர் கவுன்சில் அதிகாரிகள் பேபி ககாவுக்கு தடை விதித்து உள்ளார்கள்.

இத்தடையை எதிர்த்துப் போராட உள்ளார் உணவகத்தின் உரிமையாளர்.இந்த ஐஸ் கிறீம் தயாரிப்புக்கு முலைப் பாலை தந்து இருந்த பெண்களையும் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

மதுபானம், புகையிலை ஆகியவற்றின் பாவனைக்கு தடை இல்லாதபோது இம்முலைப் பால் ஐஸ்கிரீமுக்கு மாத்திரம் ஏன் தடை? என்று வினவுகின்றார்.




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"