குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங்கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூகத்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளைகாக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் உலக நாளாக அனுசரிக்கப்படுகிறது. பாலியல் கொடுமைகளைத் தடுக்க நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்களும் ஏராளம் உள்ளன. நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* இந்தியாவில் பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ல் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பாலியல் கொடுமைக்கு எதிராக பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுவதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக செயல்படும் முறைகள்:

* உங்கள் குழந்தையோடு தனிமையில் ஒருவர் அதிக நேரம் செலவிடும் தருணங்களை தவிர்ப்பது. குழந்தையின் மீது யாராவது அதிக விருப்பம் காட்டினால் உஷாராக இருப்பது.

* பாலியல் கொடுமை பற்றி குடும்பத்தினரிடமும், மற்றவரிடமும் பேச குழந்தைகள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

* பாலியல் கொடுமை நடந்தால் அதை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடாது என பெற்றோர் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அதில் குழந்தையின் தவறு ஒன்றும் இல்லை. பாலியல் குற்றம் புரிபவரின் வலிமையான ஆயுதமே, குழந்தைகளின் பயம், தயக்கம் ஆகியவைதான். எனவே ரகசியம் உடைப்பதே குற்றத்தை தடுக்கும்.

* குழந்தையின் அந்தரங்க உடல் உறுப்புகள் பற்றியும், பிரச்சினைக்குரிய தொடுதல், பிரச்சினைகளற்ற தொடுதல் பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* விருப்பமில்லாதவர்களோடு குழந்தைகள் இருக்க வேண்டியதில்லை என்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

* குழந்தைகளிடம் கடினமாக பெற்றோர் நடந்து கொள்ளக்கூடாது. அன்பும், பாராட்டும் கிடைக்காத குழந்தையை பாலியல் குற்றம் புரிபவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர்.

* பள்ளிகளில் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு பாலியல் கொடுமையை தடுக்கும் சுய பாதுகாப்பு செய்திகளை வழங்கலாம். பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்படைய வைப்பதும் பெற்றோரின் கடமை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"