விலங்குகளை விட அதிவேகம் கொண்ட பெண்களின் அகோர செக்ஸ் பசி : ஆய்வில் தகவல்


கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.

மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட சக்தி ஜாஸ்தி
பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.

கலாச்சாரம் தடுக்கிறதே
ஆண்களை விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார் டேணியல்.

விலங்குகளை விட அதிவேகம் கொண்டவர்கள்
செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.

ஆண்களால் தாங்க முடியாது
பெண்கள் தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.

அடக்கப்பட்ட உணர்ச்சிகள்
பெண்களைப் பொறுத்தவரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தாங்கள் சார்ந்த கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அல்லது தங்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.

பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.

தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"