9 வயது சிறுவனை 2 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி


வடகிழக்கு தென் ஆப்பிரிக்கா ஷிம்குங்வே பகுதியை சேர்ந்தவர் ஹெலன் ஷாபாங்கு ( வயது 63) இவரது கணவர் ஷாபாங்கு (வயது 66) இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

ஹெலன் ஷாபாங்குவின் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து கூறியதால் பாரம்பரியத்தை முன்னிட்டு இவர் 9 வயது நிரம்பிய ஷானாலே மசிலிலா என்ற பள்ளி மாணவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலம் மற்றும் வெள்ளி நிற உடையில் மணமக்கள் கலந்து கொண்டனர். திருமணவிழாவில் மணமகளின் உண்மையான கணவர் ஷாபாங்கும் கலந்து கொண்டார்.

திருமண விழா புமலங்கா பகுதியில் நடைபெற்றது.விழாவில் விருந்தினர்கள் புத்தாடை அணிந்து ஆடி பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஹெலன் ஷாபாங்கு கூறுகையில் நானும் எனது குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த சிறுவன் திருமணம் ஒரு பிரச்சினை அல்ல. மற்றவர்கள் கூறுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

என்னை இந்த சிறுவன் மண மகளாக தேர்வு செய்தத எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்கள் முன்னோர்களின் சந்தோசத்திற்காக எனது குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் இந்த திருமணம் நடந்து உள்ளது. என கூறினார்

மாப்பிள்ளை சிறுவன் கூறும் போது நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் பெரியவனாகும் போது, ஹெலனை திருமணம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று எனது கல்வியை தொடருவேன்.என கூறினான்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"