சாட்டிங்குல பெண்களுக்கு வலை விரிக்கும் ஆண்களின் உத்திகள்!


பேஸ்புக், ஆர்குட், ட்விட்டர்னு நெறைய நெறைய இணைய தளங்கள் மூலமா நமக்குப் புதுப் புது நட்புகள் கிடைக்குது. தற்செயலா, எந்த உள்நோக்கமும் இல்லாம, நட்பின் அடிப்படைல மட்டும் பழகுறவங்க சிலர் இருந்தாலும், தங்களுடைய வக்கிர புத்திக்காக, ஆண்கள் / பெண்கள் யாராவது சிக்க மாட்டாங்களானு வலை விரிக்கிறவங்களும் இருக்காங்க.அப்படி புதுசா அறிமுகமாகுற ஆண் பெண் மத்தியில நடக்குறச் சாட்டிங்குல, சம்மந்தப்பட்ட ஆண் எப்படியெல்லாம் சாமர்த்தியமா பேசுவானுன்னு அலசலாம் வாங்க..

1. உன்ன நா எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப் பிட்றதா?“னு அர்த்தம். உரிமை யா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்“ னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி“னு ஏதாவது பேர்வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. ( எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக் கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டிதான் கூப்டுவேன்.. சோ க்யூட்..“னு உளறுவாங்க)

2. டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடி“னு சொல் வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறி கிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுற துக்காக சொல்ல ஆரம்பிச்சுபி ன் அதுவே பழக்கமாய்டும்.

3. உனக்கு நா யாரு?
இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசி கிட்டு இருக்கும்போது திடீ ருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?“ங்குற மாதிரி போட்டு வாங் குவானுக.

4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..
சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன் போடுவாங்க.ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்“னு சொல்வாங்க.

5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..
கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்லமாட்டாங்க. இப்ப வேணாம் .. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண் ட்றாங்க ளாம்.

6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..
ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க. ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க ”ப்ளீஸ் சாப்பிட்டு வா, உடம்ப கெடுத்துக் காத“னு அக்கறையா பேசு வாங்க.

7. நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..
படிக்குற காலத்துல எந்நூறு அரியர்ஸ் வச்சிருப்பான், ஊர் சுத்தி கிட்டு வெட்டியா இருப்பான். ஆனா ச்சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம் மாவுக்கு மரி யாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்ற மாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க“ .. அப்படி இப்படினு வீரா வேசமா பேசுவாங்க. அப்பதான் இவங்கள பொறுப்பா னவன்“னு அந்த ப் பொண்ணு மெச்சிக்குமாம்.

8. நா பெரிய அப்பாடக்கராக்கும்..
இவுனுகளுக்கு வேலை வெட்டி யே இருக்காது.. ஆனா நா பெ ரிய அப்பாடக்கர், சமூகசேவை பண்றேன், கண்தானம் பண்ணி ருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உத வி பண்றேன்“னு ஓவரா அளந்து விடுவானுங்க.

9. கொசுவத்தி சுத்துவானுக..
நா ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஆனா அவ என் ன வேணாம்னு உதறிட்டுப் போய்ட்டா“னு ஒப்பாறி வைக்காத குறை யா கொசுவத்தி சுத்துவானுக. How unlucky she is?’னு ஃபீல் பண்ணி ஆறுதல் சொல்லணுமா ம்… சென்டிமென்டா டச் பண்றா ய்ங்கப்பா..

10. இந்த அளவுக்கு நா யார்கிட் டயும் பேசினதில்ல..
எந்தப் பொண்ணுகிட்டச் சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பொண்ணுகூட ச்சாட் பண்ணுவான்.. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவான். தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பொண்ணு நெனைக் கணு மாம்.

11. அப்புறம்.. சொல்லு..
இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாமச்சாட்டிங்கே இருக்காது. நடுராத்திரி ரெண்டுமணி வரைக்கும் ச்சா ட் பண்ணிட்டு குட்நைட் சொல்லு வாங் க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்“னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு“ னு திரும்ப ஆரம் பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில“னு வேற அப்பப்ப சொ ல்லிக்குவாங்க.

12. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத் துவச்சிருக்கணும்.
சாதாரண விஷயத்தப்பத்தி பேசினாகூ ட, பொண்ணுங்கள புகழ்ந்து தள்ளிடு வாங்க. உதாரணத்துக்கு, பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போ ட்டேன்“னு அந்தப் பொண்ணு சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள பொண்ண நா பாத்த்தேயில்ல.. இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெரு மையா இரு க்கு, உனக்கு வரப்போற புருஷன் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவன்“னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க.

13. கல்யாணப் பேச்சு..
என் வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிக்கிறாங்க“னு பேச்ச ஆரம்பிப்பா ங்க. பொண்ணு எப்படியிருக்கனும்னு எதிர்பா ர்க்குறீங்க“னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக் கணும்“னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க. அந்தப் பொண்ணு க்கு கோவம் வந்துடுச்சுனா உட னே “ஐயோ.. நா உன்ன மாதிரினு தான் சொன்னேன். உன்னைனு சொல்லல“னு சமாளிப்பானுக.

14. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??
எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய எந்தப் பொ ண்ணு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப் போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல“னு ஓவரா விரக்தியாபேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு ”நா இருக்கேன்ல”னு அந்தப் பொண்ணு சொல் லும்..

15. உனக்குப்பிடிக்கலேனா யூரின்கூட போ க மாட்டேன்..
பேச்சுவாக்குல அந்தப் பொண்ணு எதையா வது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட் டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணிமாட்டேன், உன்னவிட எனக்கு எது வும் முக்கியமில்ல“னு பிலிம் போடு வாங் க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினி மாவுக்குப் போறேன்“னு சும்மா போட்டு வாங்குவானுக. என்கூட ச்சாட் பண்ண மா ட்டியா? “னு அவ கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண் ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்சவிட, எனக்கு உன் கூட பேசுறது தான் முக் கியம்னு சொல்வாங்க.

16. நா ரொம்ப நல்லவனாக்கும்..
உன்கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பொண்ணையும் பா க்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லி ட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக் கு, உன் கூட பேசிகிட்டே இப்படி யே இருந்திட்றேன்“னு சொல்வா ங்க.

17. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..
இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டி ங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமா வே பாக்கத் தோணல தெரியுமா..“னு ரீல் விடுவாங்க. அதே மாதிரி தங்களோட போட்டேவ அனுப்பும்போது, உடற்கட்டு, கை, மார்பு தெ ரியுற மாதிரியான போட்டோவ பெரும்பாலும் அனுப்பு வாங்க. ஆண்மையா இருக் கேன்னு காட்றாங்களாம்.

18. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..
வெளிப்படையா இருக்காங் களாம்.. எட்டு முறை லூஸ் மோசன் போனதைக்கூட சொ ல்லுவாங்க.. அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்களேனு பொண்ணு ங்க ஆச்சர்யப்படணு மாம்.

19. பொசசிவ்வை கிளறுவாங்க..
கஸ்டமர்கேர்“ல இருந்து ஒரு பொண்ணு பேசுச்சு.. வாய்ஸ் நல்லாயிருந்துச்சுப்பா..னு சொல்லி பொண்ணு ங்களோட அடிப்படை பொசசிவ் குணத் தை கிளறுவாங்க. திட்டு வாங்கினதுக் கப்புறம், “ ஏய் சும்மா சொன்னேன்பா.. உன்குரலுக்கு ஈடு எதுவுமில்ல“னு வழி வானுக.

20. என் மேல நம்பிக்கை இல்லேனா….
“எனக்கு நெட்ப்ராப்ளம், நா ஊருக்கு போறேன்.. அதுனால சாட்டிங் வர முடி யாது, உன் நம்பர்ல இருந்து SMS பண்றியா???  என் மேல நம்பிக்கை இல்லேனா காய்ன் போன்ல இருந்து கூட பேசுப்பா..“ இது அவர்களின் உச்சகட்ட ஆயுதம். நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுலதான் பல பொண் ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன??? ச் சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்… வே றென்ன?? அப்படியே போக வேண்டியதுதான்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"