சிக்கன் வாங்கிகொடுத்து மாணவர்களுடன் "செக்ஸ்" ஆசிரியை கைது.!


இங்கிலாந்தை சேர்ந்தவர் எம்மாவெப் (42) திருமணம் ஆகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்தார். மாணவர்களுடன் “செக்ஸ்” உறவு வைத்து கொள்வதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு. இதற்காக முதலில் மாணவர்களுக்கு இவர் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவார்.

தனது வலையில் அவர்கள் விழுந்ததும் பிரபல கோழிக்கறி கடைக்கு அழைத்து சென்று சிக்கன் உணவு வகைகளையும் வாங்கி தருவார். பின்னர் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து சென்று “செக்ஸ்” உறவில் ஈடுபடுவார். இதுபோன்ற பல மாணவர்களை சீரழித்து உள்ளார்.

இந்த நிலையில் அதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் எம்மா வெப்பை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 32மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர் 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் தான் பணியாற்றிய பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"