சுய இன்பத்தை மனக்கட்டுப்பாடு மூலம் கட்டுபடுத்துவது எப்படி?


ஒருவர் சுய இன்பத்தில் ஈடுப்படும் போது விந்து சக்தி வெளியேறி ஒரு பரவச நிலையைத் தருகிறது. ஆமாம்...! வித்து சக்தி என்றால் என்ன ? அது எப்படி உருவாகிறது ?

நம் உயிர் சக்தி அல்லது விந்து அணுவைத் தான் நாம் வித்து சக்தி என்கிறோம். நாம் சாப்பிடும் உணவு ஏழு விதமான தாதுக்களாக மாறுகிறது. அது இரசம்,இரத்தம்,மாமிசம்,கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் வித்துக் குழம்பு. இந்த வித்து குழம்பு தான் விந்து. இந்த வித்துக் குழம்பு நாளாக நாளாக நிறைந்து, வெளியேற யத்தனிக்கும்போது உடலில் ஒருவித தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி உண்டாகும்.

தாவணிகளை கண்டால் பட்டாம் பூச்சி பறக்கும். நீலப்படம் பார்க்க தூண்டும். பாடப் புத்தகங்களின் அட்டையில் நமீதாவையோ நயன்தாராவையோ ஒட்டச்சொல்லும். பெண்களுக்கு சூர்யாவுடனோ அல்லது ஆரியாவுடனோ கனவுக் காட்சியில் ஆடச் சொல்லும். ஆண்களுக்கு வித்து சக்தி உற்பத்தி அதிகரித்து திரவ நிலையில் நிறைந்து,எண்ணத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட இரவில் கனவில் ஏதோ நிகழ்ந்து நிஜத்தில் உங்கள் உள்ளாடை நனைக்கும். இது இயல்பாக எல்லோரும் எதிர்கொண்ட ஒரு அனுபவம் தான். இதில் யோகிகளும் விதிவிலக்கல்ல. இது இயல்பானது.

சரி ! இதற்கு மேல் இந்த அனுபவத்தில் ஒரு சுகத்தை உணர்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்தி பார்க்க தூண்டும் மனோபாவம்தான் சுய இன்பம்.

நவீன மருத்துவம் சொல்கிறது. இது இயல்பானது தான் என்று !

ஒரு துளி வித்து அணு உருவாக கோடானக் கோடி உயிர்சக்தி தேவைப்படும். இந்த சூழலில், செயற்கையாக வெளியேற்றும் போது உடனுக்குடன் உடல் வித்துக்குழம்பை வெளியேற்றும் அளவிற்கு உயிர் சக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.வித்தை தேவையின்றி வெளியேற்றுவது உயிர் சக்தியின் இருப்பை வீணாக்குவதுதான். !

ஒருவன் ஆரோக்கியமான உணவை உண்ணும்போது தான் இந்த ஆரோக்கியமான மாற்றம் நிகழும். உடன் மது,புகை போன்ற பழக்கம் இருந்தால், சாப்பிடும் உணவில் உற்பத்தியாகும் பாதி உயிர்ச் சக்தியில் மது,புகையால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே சரியாகும். மீது உயிர்சக்தி என்னதான் முயன்றாலும் வித்து சக்தி நீர்த்துபோன தன்மையிலேயே இருக்கும்.

வித்துசக்தி கெட்டியாக கெட்டியாக உடல் மற்றும் மனவலிமைக் கூடும்.வித்து குழம்புதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஏன் ஆயுளின் அடிப்படையும் கூட. வித்து எந்த அளவிற்கு அதிகமாக உடம்பில் தங்குகிறதோ அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்,சுறுசுறுப்பு, நினைவுத்திறன், மகிழ்ச்சி எல்லாம் நிகழும்.உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்புத் தன்மை பரவும்.

வித்து சக்திக் குறையும் போது சோம்பல்,அடிக்கடி உடல் அசதி, நினைவு மறதி,உடல் நடுக்கம்,நரம்பு தளர்ச்சி, மனதில் குற்ற உணர்ச்சி, கவலை வரும், ஒரு காலத்தில் கவலை மிகுந்து அச்சம் ஏற்படும்.இந்த அச்சம் தான் இன்று லாட்ஜில் ரூம் போட்டு லேகிய விற்கும் மருத்துவர்களின் முதலீடு.

தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடும் போது உயிர்சக்தி நீர்த்துப் போகும். அதாவது திரவத் தன்மை அதிகமாக இருக்கும்.ஆனால் அதில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.அந்த சூழலில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் நோஞ்சானாக தான் பிறக்கும். மேலும் நீர்த்துப் போன நிலையில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஈடுபடும் போது விரைவில் வெளியாகி உங்களை அசடுவழியச் செய்யும்.ஹி..ஹி...!

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் . சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?.

இந்த உணர்வு இயல்பானது. எப்படி சிறுநீர்,மலம் கழிப்பது இயல்பானதோ, அதே போன்று பால் உணர்வும் இயற்கையின் தூண்டுதலே. அதனால் தான் ஆண்-பெண் நட்பை திருமண பந்தத்தில் இணைத்தார்கள். அவ்வாறு மிகும் கழிவை வெளியேற்ற,இல்லற பந்தம் உறுதுணை புரிகிறது. அதுவரை பொறுமை காத்தல் நலம்.

பொறுத்தார் பூமி ஆள்வர். பொறுமையிழந்தால் பொண்டாட்டியை கூட ஆளமுடியாது !அது எப்படி?என் சூழலுக்கு நான் உடனடியாக திருமணம் செய்ய முடியாது.அதுவரை நான் எப்படி தாக்கு பிடிப்பது?

நான் சும்மா இருந்தால் கூட அது தூக்கத்தில் வெளியாகிவிடுகிறதே என்ன செய்வது ? உங்கள் செல்லச் சிணுங்கல் கேட்கிறது.

கவலைவேண்டாம். இது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல. வீரத்துறவி விவேகானந்தருக்கே இது பிரச்சனையாக இருந்திருக்கிறது.பாலியல் தொந்தரவை கட்டுப்படுத்த முடியாமல் தன் உறுப்புகளை எரியும் நெருப்பில் பொசுக்கிவிட முயற்சித்தார் என்று அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் சொல்கிறது. விவேகானந்தரை விடுங்கள், நம்ம நித்யானந்தா ரஞ்சிதா சமாச்சாரம் உலகிற்கே தெரியுமே. கேரளாவின் கன்னியஸ்திரிகள் கதைகள் இப்பொது நாவலாகவும் கிடைக்கின்றது.

இதில் இருந்து என்ன தெரிகிறது. பாலியல் உணர்வை கட்டுபடுத்த முடியாது. ஆனால் நெறிப்படுத்த முடியும்.

பாலுணர்வை நெறிபடுத்த ஒரே வழி. நம் மனதை எப்போது ஆரோக்கியமாக அத்தகைய சிந்தனைகளில் விழாமல் வைத்திருப்பது தான். அதற்கு பெரிதும் உதவுகிறது தியானம். அவரவர் விரும்பிய வகையில் ஏதேனும் ஒரு தியானத்தை கற்றுக்கொண்டு பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருமைப்படும்.

உணவுமுறையில் ஒழுக்கம்.உடல் கிளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நலம்.(Alcohol Increase the Sexual Desire: But not the pleasure).முட்டை சார்ந்த உணவுகள் புரத நிறைந்துக் காணப்படுவதால் அது உண்ணும் போது தூண்டுதல் அதிகமாக இருக்கும்.விவேகானந்தர் புகைப்பதை விரும்பினார்.மீன் உணவிலும் பிரியம் கொண்டிருந்தார் என்கிறது அவரின் சரிதை. அதனால் கூட அவருக்கு உடலியல் தூண்டுதல் அதிகமாக இருந்திருக்கலாம்.

உணவிற்கு அடுத்தபடியாக தனிமையை தவிருங்கள்.பெரும்பாலும் தனிமையான சூழலில் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படும். முக்கியமாக கிளர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பதை தவிர்க்கலாம்.

எது என்னவென்றாலும், எண்ணத்தின் அடிப்படையில் தான் எல்லா செயல்களும் எழுகின்றன. உங்களுக்கு இச்செயல் குற்ற உணர்ச்சித் தரும் எனில் அதில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்?
ஒரு சங்கல்பத்தை “இது என் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத செயல் ; இதில் இருந்து விடுபடுவேன்,என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காப்பேன்” என்று தினந்தோறும் விழிக்கும்போது எடுத்துக்கொள்ளலாம். இது நாளடைவில் மனதினுள் ஒரு கட்டளையாகவே பதிந்து உங்களைக் காக்கும்.

காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுக்காப்பதில் உறுதுணைப்புரிகிறது.சிவவாக்கியர் என்னும் சித்தர் காயகல்பத்தின் அற்புதத்தை இவ்வாறு சொல்கிறார்.

“உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தில் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரோ
விருத்தரும் பாலராவார் அருள் தரித்த
அம்மைப்பாதம் அய்யன் பாதம் உண்மையே “

காயகல்ப பயிற்சியின் மூலம் உயிர்சக்தி ஒஜஸ் பதங்களாக மாறும்போது மூப்பு வராது, என்றும் இளமையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனாவான் என்பது அதன் சாரம்சம்.

காயகல்பம் பிரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல இல்லற ஜோதிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். வயக்கரா இல்லாமலே அதன் வேலையை காயகல்பம் செய்யும். அதே நேரம் காயகல்பத்தின் இன்னொரு யுக்தி பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி,வித்துசக்தியை கெட்டிபடுத்தி இளமை நோன்பு காக்கவும் உதவும். உடலில் வித்து சக்தி மிகும்போதெல்லாம் இந்த யுக்தியின் மூலம் கெட்டியாக்கி கொண்டே வரமுடியும். இதன் மூலம் வித்தில் நீர்ப்புத் தன்மை குறைந்து தூண்டுதல் சமன்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"