இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்


ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.

அதிலுள்ள சென்சார்கள் அடுத்தடுத்த சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரங்களை கண்டறிந்து எல்.இ.டி. விளக்குகளில் பிளாஷ் செய்கிறது. அதற்கான குறியீடுகளையும் படமிட்டு காட்டுகிறது. இதைபார்த்து வாகன ஓட்டிகள் அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜப்பானுக்கு சென்றிருந்தார். அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை பார்த்து வியந்த அவர் ஜப்பானை போன்றே குஜராத்திலும் இப்படியொரு போக்குவரத்து முறையை அமைக்க சர்வதேச ஒத்துழைப்பு முகமையான ‘ஜைக்கா’ விடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அண்மையில் பிரதமரான பிறகும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று ஜப்பானை சேர்ந்த ஜீரோ சம் கம்பெனி அகமதாபாத் முனிசிபல் கழகத்துடன் இணைந்து இன்று 132 அடி ரிங் ரோட்டில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதற்கட்ட சோதனை நடத்தி பார்த்தது. இதற்கு ‘ஜைக்கா’ நிதியுதவி செய்தது.

இந்த சோதனையில், சென்சார் வசதி கொண்ட 14 கேமிராக்களும், வி.எம்.எஸ் எனப்படும் 4 பெரிய எல்.இ.டி. விளக்குகள் கொண்ட டிஸ்பிளே போர்டுகளும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பொருத்தப்பட்டது. வாகன போக்குவரத்தை அந்த சென்சார்கள் துல்லியமாக உணர்ந்து குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பிளாஷ் செய்தது.

இந்த சோதனை 2015 மார்ச் இறுதி வரை செயல்படுத்தப்படும். அதன்பிறகு, ஏ.எம்.சி. முறையில் இந்த ஐ.டி.எஸ் டிராபிக் சிஸ்டம் இந்தியாவில் பல நகரங்களில் அமைக்கப்படுகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"