பெண்களின் கவர்ச்சி உடைகளால் உடைபடும் ஆண்களின் மனசு !


பட்டணத்துத் தெருக்களின் பலஇடங்களில் இதுபோன்ற “ஜில்”லென்ற காட்சிகளைக் காணலாம்.உடம்பின் பாகங்களை இறுக்கிப்பிடிக்கும் டைட்டான ஜீன்ஸ், ஒப்புக்காக மேலே ஒரு பனியன், அந்த் பனியனின் மார்புப் பகுதியில் நெருப்பைப் பற்றவைக்கும் வாசகங்கள்…

இன்னும் ஒரு சிலர் போட்டிருக்கிற உடைகளோ, போட்டிருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு உடம்பின் பெரும்பாலான பகுதிகளை உள்ளே வெளியே என வஞ்சகமில்லாமல் காட்டும்….அதிலும் சிலர் ‘ஸ்கர்ட்” என்கிற பெயரால் முழங்கால் வரை மட்டுமே அணிந்துவந்து, கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு பண்ணுகிற அவஸ்தை….

சும்மா இருக்கும்போதே சுடுதண்ணி ஊத்துனமாதிரி தவிக்கிற விழிகளை– இப்படி வந்தால் எப்படிக் கட்டுப்படுத்துவது?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நீத்து சந்திரா. உள்ளாடையே போடாமல் (?) மிகவும் குட்டையான பாவாடையும், முன்னழகு தெரியும் அளவுக்குத் தாராளமான அகலம் கொண்ட மேலாடையும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் போது தன் ஆடை விலகியதைக் கூடக் கண்டுகொள்ளாமல், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி அவர் அமர, எதிரிலிருந்த புகைப்படக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ந்தனர்.

பலர் வைத்த கண் வாங்காமல் அவரது ஆடை விலகலையே பார்த்துக் கொண்டிருந்தனர்…. கேமராக்களின் பளிச் பளிச் ஒளிவெள்ளம்…. அப்படியும் மறைக்கவோ, எழுந்து அப்புறம் செல்லவோ நீத்து சந்திரா முயற்சிக்கவில்லை. படங்கள் சென்சார் செய்யப்படாமல் அப்படியே இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் வந்த பிறகு, அதுபற்றி கருத்துக் கூறிய நீத்து, “நான் உள்ளாடை அணிந்து வந்தால் என்ன… எப்படி வந்தால் என்ன? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்… வேலையப் பாருங்கள்….” என்று சிம்பிளாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

சானியா மிர்சா கூட டென்னிஸ் மைதானத்தில் பெற்ற வெற்றிகளுக்காக மட்டும் பெரிய அளவில் புகழ் பெற்று விடவில்லை. இறுக்கமான குட்டைப் பாவாடை + பனியன் அணிந்து ஆடியதால்தான் அவருடைய பெயர் புயலாகப் பரவியது. மக்கள் ஆர்வமாக ஒருபோதும் அவருடைய விளையாட்டை ரசித்துப் பார்த்தது இல்லை. மைதானத்தில் அவர் செய்கிற சேட்டை, குட்டைப் பாவாடை, உள்ளாடை, நாக்கை உதடு மீது சுழற்றுவது போன்ற அவருடைய மேனரிசத்தைத்தான் ரசித்துப் பார்த்தனர்.

இப்போது அங்கேயும் கூட, கட்டாயமாகக் குட்டைப் பாவாடை அணிந்துதான் விளையாட வேண்டும் என்ற சர்வதேச பேட்மிட்டன் சம்மேளனத்தின் அறிவிப்பு– களத்தில் கவர்ச்சியை உருவாக்கும் நோக்கில் உடை விஷயத்தில் கடுமை காட்டுவதாக எழுந்த புகார்களை அடுத்துத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதுமாதிரி இன்னும்கூட சில குறிப்பிட்ட பள்ளிகளில், மாணவிகளுக்குக் குட்டைப் பாவாடைதான் யூனிபார்மாக இருக்கிறது. பலவகைகளிலும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் குட்டைப் பாவாடை முறையில் இனிமேலாவது மாற்றம் கொண்டுவரவேண்டும். அதன் காரணமாக அவர்கள் படுகிற அவஸ்தை அவ்ர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

குட்டைப் பாவாடைகளை மிகவும் விரும்பி அணிகிற பெண்கள் நிறைந்த இலங்கையிலேயே, பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து நடமாடுவதற்குத் தடைவிதிக்கப்போவதாகச் செய்தி வருகிறது.

உலகிலேயே அதிக அளவில் முதலீடு செய்யப்படும் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்கூட, பணிபுரியும் ஊழியர்கள் மரியாதைக்குரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். கவர்ச்சியாக, செக்ஸியாக. முகம் சுழிக்க வைக்கும் ஆடைகளை அணியக் கூடாது என கட்டுப்பாடுகளை வங்கிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் தங்கள் பின்புறம் எடுப்பாகத் தெரியும்படி குட்டை பாவாடை (ஸ்கர்ட்) அணியக் கூடாது, வெளியே தெரியும் அளவு மிக அடர்த்தியான கலர் உள்ளாடைகளை அணியக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"