கள்ளக் காதலனுடன் தாய் செக்ஸ் வைத்தமையை நேரில் பார்த்த பச்சிளம் குழந்தைகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட விபரீதம் கொடகவெலவில் இடம்பெற்று உள்ளது.
ஒருவருக்கு வயது 11. மற்றவருக்கு வயது. 06. இவர்களின் தாய்க்கு வயது 34.
குழந்தைகளின் தாய்க்கு மருமகன் உறவு முறை உடைய 19 வயது இளைஞன் தான் கள்ளக் காதலன்.குழந்தைகளின் தகப்பன் கொழும்பில் வேலை பார்க்கின்றார். இரு வாரங்களுக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வருவார்.இந்நிலையில் குழந்தைகளின் தாயும், இளைஞனும் கள்ளத் தொடர்பை பேணி வந்து இருக்கின்றார்கள்.
இளைஞன் அடிக்கடி இவ்வீட்டுக்கு வந்து போகின்றமையை பக்கத்து வீட்டுக்காரர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். நேரம் கெட்ட நேரத்தில் இளைஞன் மோட்டார் சைக்கிளில் வருகின்றமையும், சைலஞ்சரை சத்தமாக ஒலிக்க செய்து சமிக்ஞை கொடுக்கின்றமையும் வழக்கமான காரியம்தான். பெரும்பாலும் இரவில்தான் வருவார். இவர்களின் கள்ளக் காதல் குறித்து ஊரில் கிசுகிசுப்புக்கள் உலாவி வந்திருக்கின்றன.
கடந்த தினத்தில் மாலையில் கொழும்புக்கு புறப்பட்டு சென்று இருந்தார் குழந்தைகளின் தகப்பன். இவர் அன்றைய தினம் திரும்பி வர மாட்டார் என்பதை இளைஞன் மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். இருட்டிய பின்னர் இவர் கள்ளக் காதலி மாமியின் வீட்டுக்கு வந்தார். இவர் குழந்தைகளுக்கு உறவு முறையில் மைத்துனன். எனவே இளைஞனை குழந்தைகளுக்கு மிக நன்றாக தெரியும்.
குழந்தைகள் படுக்கைக்கு போனார்கள். குழந்தைகள் உடனேயே நித்திரை ஆகி விட்டனர் என்று கள்ளக் காதலர்கள் முடிவெடுத்தனர். வீட்டின் முன் அறைக்கு சென்று வழக்கம் போலவே உடலுறவில் ஈடுபட்டார்கள். ஒரு வகையான சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்தனர் குழந்தைகள். வீட்டின் முன் அறைக்குள் இருந்துதான் சத்தம் வருகின்றது என உணர்ந்தனர். முன் அறைக்குள் ஓடோடி சென்றனர்.மைத்துனனும், தாயும் பிறந்த மேனியாக படுக்கையில் படுத்து இருக்கின்றமையை கண்டனர் குழந்தைகள். குழந்தைகளுக்கு நிர்வாண கோலத்தை பார்த்தமையால் வெட்கமும், கூச்சமும் வந்தது. வேறு அறைக்குள் ஓடிச் சென்று சிரித்தார்கள்.
கள்ளத் தொடர்பை குழந்தைகள் பார்த்தமையால் என்ன செய்யலாம்? என்று அறியாமல் தடுமாறியது சட்ட விரோத காதல் ஜோடி. குழந்தைகளின் தாய்க்கு ரொம்பவே அவமானம் ஆகி விட்டது. கூனிக் குறுகிப் போய் விட்டார்.
இளைஞன் படுக்கையை விட்டு குதித்து எழுந்தார். மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். குழந்தைகளின் அறைக்கு போனார்.கண்ட அசிங்க காட்சியை குழந்தைகளின் தகப்பனிடம் குழந்தைகள் சொல்லி விடுவார்கள் என்பது இவரின் பெரிய பயமாக இருந்தது.கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து வந்து குழந்தைகளை தாக்கத் தொடங்கினார்.
குழந்தைகளின் தாய் பிள்ளைகளை காப்பாற்ற முயன்றார். குழந்தைகளும், தாயும் காயப்பட்டுப் போனார்கள். இரத்த வெள்ளத்தில் மிதந்து காணப்பட்டனர்.
பக்கத்து வீடு ஒன்றில் கொண்டாட்டம். ஏராளமானவர்கள் இக்கொண்டாட்டத்துக்காக திரண்டு இருந்தனர். சத்தம் கேட்டு இவ்வீட்டுக்கு ஓடோடி வந்தனர். இளைஞனோ சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். பக்கத்து வீட்டுக்கு பின்னால் இருந்த பூங்காவுக்குள் ஒளிந்தார்.
இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட மூவரையும் அயல்வாசிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலாயினர். ஆனால் வழியில் 06 வயது குழந்தை இறந்து போனார். இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டபோது 11 வயதுச் சிறுவனும் இறந்து போனார். குறைந்த அளவு காயங்களுக்கு உள்ளாகி இருந்த தாய்க்கு கொடகவெல வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு ஏற்றப்பட்டு பத்து நிமிடங்களுக்கு பின்னர் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதை பக்கத்தில் உள்ளவர்கள் கண்டனர். மர்ம நபர் வித்தியாசமாக காணப்பட்டார். பொருத்தம் அற்ற டெனிம் நீள காற்சட்டை, ரவிக்கை அணிந்து இருந்தார் மர்ம நபர். இவரை மடக்கிப் பிடித்த மக்கள் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைகளை படுகொலை செய்ய நேர்ந்தமையின் பின்னணியை போலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார் இளைஞன். பக்கத்து வீட்டில் காயப் போடப்பட்டு இருந்த உடுப்புக்களைதான் இளைஞன் எடுத்து அணிந்து கொண்டார் என்றும் தெரிய வந்து உள்ளது.
குழந்தைகளின் தாய்க்கு தேவையான வசதிகள் அனைத்தையும் கணவன் செய்து கொடுத்து இருந்தார் என்றும் வேற்று ஆணுடன் தொடர்பு வைத்தமையால் குழந்தைகளின் உயிரை விலையாக கொடுக்க நேர்ந்து விட்டது என்றும் ஊர் மக்கள் பேசுகின்றார்கள்.