மாணவிகளே எல்லாரும் ஜட்டி போட்டிருக்கீங்களா? கேள்வி கேட்கும் ஆபாச ஆசிரியர்!


அச்சம்பட்டி பள்ளியில் படிக்கும் தங்கள் பெண் பிள்ளைகளுடன் நெல்லைக்குப் படையெடுத்த மீனாட்சிபுரம் தலித் மக்கள்… அங்குள்ள அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் அதிகாரியான ஜெசோலைட் செல்வியை முற்றுகையிட்டு…“அம்மா… இனி எங்க பிள்ளைகளை அச்சம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பமாட்டோம்.வேற ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்க்க நீங்கதான் உதவணும்” என்றார்கள் கண்ணீருடன்.

திகைத்துப்போன அந்த அதிகாரி…’’”"என்ன ஆச்சு? அச்சம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு என்ன குறைச்சல்?” என்றார் ஒன்றும் புரியாமல். மீனாட்சிபுரவாசிகளோ “”"அங்க வாத்தியார்ங்கிற பெயரில் ஒரு கேடுகெட்ட மிருகம் இருக்கு.இனியும் எங்கப் பிள்ளைகளை அங்க அனுப்பினா… அவ்வளவுதான். அந்த பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் ஒரே சாதி என்பதால் அவரைத் தட்டிக்கேட்கமாட்டேங்கறாங்க” என்றார்கள் கண்ணீரைத் துடைத்தபடி.

அந்தக் கல்வி அதிகாரி மேலும் விளங்காமல் திகைக்க… பாதிக்கப்பட்ட மாணவிகள் கைகளைக் கட்டிக்கொண்டு..பாடம் ஒப்புவிக்கும் பாணியில்… தாங்கள் அனுபவித்த சங்கடங்களை அவரிடம் ஒப்பிக்க ஆரம்பித்தனர்.

“”அம்மா… அங்க இருக்கும் ஜெயராஜ் சார் ரொம்ப மோசமா நடந்துக்கிறார். தினசரி நாங்க ஸ்கூலுக்கு வந்ததும்… எல்லாரும் ஜட்டி போட்டிருக்கீங்களா? காட்டுங்கன்னு சொல்வார்.

நாங்க அழுதாலும் விடமாட்டார். அவரோட அடிக்கு பயந்து வேறவழியில்லாம… நாங்க காட்டுவோம். அதுக்குப் பிறகும் சும்மா விடமாட்டார். மேல சும்மீஸ் போட்டிருக்கீங்களான்னு தொட்டுப் பார்ப்பார். அப்புறம் பின்பக்கமெல்லாம் தட்டி என்னென்னவோ சொல்வார். எங்களுக்கு பயமா இருக்கு. இனி அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டோம்” என்றார்கள் சங்கடமும் வேதனையுமாக. திகைத்துப்போன கல்வி அதிகாரியோ “”கவலைப்படாதீங்க. நான் விசாரிக்கிறேன்” என அவர்களை அனுப்பிவைத்தார்.

அச்சம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் இருக்கும் ஒரே ஆண் ஆசிரியர் ஜெயராஜ்தான். மீதமுள்ள நான்குபேர் ஆசிரியைகள். இது தொடர்பாக தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியிடமே நாம் கேட்டபோது, “”எங்கிட்டயும் அவங்க இந்தப் புகாரைச் சொன்னாங்க.

நானும் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு கண்டிச்சிட்டேன். இதைத் தவிர நான் வேறு என்ன பண்ண முடியும்?” என்று முடித்துக்கொண்டார்.

இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் கவனத்துக்குப்போக… அவ ரும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். சர்ச்சைக்குரிய ஆசிரியர் ஜெயராஜை நாம் தொடர்புகொண்டு அவர் மீதான புகார் குறித்து கேட்டபோது, “”பள்ளிக்கூடப் பிள்ளைகள்… ஜட்டியெல்லாம் போட்டுக் கிட்டு நீட்டா… ஒழுக்கத்தோட டிரஸ் பண்ணிக்கிட்டு வரணும்னு சொல்லுவேன். அதுதான் இப்ப தப்பா ஆய்டிச்சி. மத்தவங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லைங்க” என்கிறார் கூலாகவே.

ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்… ஒழுக்கம் என்ற பெயரில் ஒழுக்கத்துக்கு எதிராக நடப்பது மன்னிக் கக்கூடாத குற்றம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"